Sunday, October 25, 2009

தொலைத்ததில் கிடைத்தவை …..


உன்
ஒவ்வொரு சிகை அலங்காரத்திலும்
என்
கவிதைகள் திருத்தப்படுகின்றன …..

ஊர்தியை விட்டு
நீ இறங்கும் போதும்
நான் வெறித்து பார்கிறேன்..,
நீ அமர்ந்திருந்த இருக்கைகளை …,,,
உன் பிம்பங்கள் ஏதேனும்
மிச்சம்மிருக்கின்றனவா என்று !!!

உன் ஒவ்வொரு
புன்னகையிளும்
நான் தொலைந்து போகிறேன்
அழகழகாய் …..


தொலைந்து விடவே
எனக்கு சம்மதம் ,
என்னை தினமும்
தொலைத்து விட்டு
செல்லடி
என் செல்லமே !!!

சில சமயங்களில்
என் கவிதைகளை
படித்தவிட்டு நீ அழுகின்றாய் ….
உன் கண்ணீரை
படித்துவிட்டு நான்
கவிதை எழுதுகின்றேன் ….

உன் பார்வைகளோடு
போட்டி இட்டு பலமுறை
கிறுக்கி விட்டேன்
ஒரு முறை கூட
ஜெயிக்க முடியவில்லை
என் கவிதைகளால் ….

No comments:

Post a Comment