Sunday, October 25, 2009

என் சிந்தனைக்கு சிற்பி நீ…


ஒவ்வொரு கவிதையாக
எழுதி வைத்து விட்டு
படித்து பார்க்கிறேன்
ஒன்று கூட அழகாய்
இல்லை உன்னை விட….

இதை விட ஏதேனும் கடினமாய்
கடந்து வந்தேனா என்று தினம் தினம்
புரட்டிபார்க்கிறேன் என் சரித்திரத்தை
பலமுறை…,,,
தினமும் கடந்து செல்கையில்
உன்னை ஒரு முறை ….

என் கவிதைகளை படிக்கும்
வாசகி நீ,
உன் கனவுகளை படிக்கும்
வாசகன் நான்…


பெயர் குறிப்பிட விரும்பாத வாச‌கி
இப்ப‌டிக்கு என் காத‌ல்…
சொல்லி சென்றது என்னிட‌ம்
உன்னில் சில‌ மௌனங்கள்…


என்னை செதுக்கும் சிற்பி நீ
உன் வைர‌ விழிகளால்…
உன்னை மட்டுமே காட்டும்
கவிதை சிற்பம் நான்
என் வைர‌ வ‌ரிக‌ளால் ….

No comments:

Post a Comment