Sunday, October 25, 2009

புலம்பல்களில் சில


உன் பார்வைகள் மட்டும் போதும்
என் எழுதுகோல் எழுத
துவங்கி விடுகிறது !!!

என் எழுதுகோல் கூட
தன்னை உருக்கி
உன்னை உயிரகியது
என் கவிதைகளில் !!!

உன் மௌனம் மட்டும் போதும்
என் மனம் பல மொழிகளை
கற்று கொள்கிறது !!!

என் சோர்வு கொண்ட மனதில்
கூட சுகமாய் நடமாடுகிறது
உன் ஞாபகங்கள் …!!!

என் நெஞ்சில் மட்டுமல்ல
என் காதலும் ஈரமனதுதான் !!
காகிதத்தை நனைகிறேன்
என் கவிதைகளால் !!!

என் கண்ணீரின் கடைசி
துளியும் கூட
உன்னைத்தான் நனைக்கிறது !!
என்
கருவிழிக்குள் கூட
இருப்பவள் நீதானே !!!

என் காதல் எனும் வலையில்
சிக்கிய மீன்கள்
உன் “கண்கள்”

கண்ணாடி மட்டுமே உன்னை
பிரதிபலிக்கும் என்றிருந்தேன் …!!!
என் கவிதைகள் கூட உன்னை
பிரதிபலிக்கின்றன !!!

உன் கண்களின் அபிநயத்திற்கு
அந்த கதகளியும் தோற்குமடி!!
செப்புமொழி பதினெட்டுடையாள்
இவள் சிந்தனை ஒன்றுடையாள் !!!

காகிதமும் கதறுதடி
உன்னை கவிதையால்
வடிக்கவில்லை என்று !!!

முக்காலமும் நீயதலால்
என் மடிபையில் தூங்குதடி
கை கடிகாரம் !!!

No comments:

Post a Comment