Sunday, October 25, 2009

பொய்கள் …


ஒரு பொய்யை மறைக்க
ஓராயிரம் பொய் சொல்கிறேன்
உன்னிடம் …
நீயும் பொய்யுரைகின்றாய்
நம்புகிறேன் என்று,
என் பொய்களை எல்லாம் ரசித்துக்கொண்டே …

என் பொய்களை மட்டும் நீ
அதிகம் ரசிப்பதால் நான்
உண்மை பேசவே மறந்து போகிறேன் ….

உன் பொய்களை ரசிக்கவே
நான் தினமும் புதுப்புது பொய்களை
சொல்கிறேன்…
ஒன்று கூட பொய்க்கவில்லை
உன் பொய்யை விட ….

நீ நம்பிவிட்டதாய்
நினைத்த பொய்கள் அனைத்தும்
பொய் பேசுகின்றன என்னிடத்தில்,
நீ என் பொய்களை நம்புகிறாய் என்று …

நான் சொல்லி முடித்த இறுதியில்,
உன் சிறு புன்னகையில் தோற்றுபோகிறது
என் பொய்கள் அனைத்தும் …

ஒவ்வொரு பொய்க்கும் நான்
ஒரு புள்ளி இட்டு முடிக்க நினைக்கும் போது
நீ மேலும் இரு புள்ளிகளிடும் போது
உயிர்ப்பிக்கின்றது எனது அடுத்தப் பொய்கள் …

நீ திருத்தும் பணிகளில்
என் பொய்களையும் சேர்த்துக்கொண்டாய்
என நினைக்கிறேன்
“இந்த பொய்யை இப்படி பேசனும்னு” எனக்கு
நீ சொல்லி கொடுக்கும் போது …

என பின்னிரவுகள் அனைத்தும்
கரைந்து போகின்றன,
நாளை உன்னிடம் பேச வேண்டிய
பொய்களை யோசித்து….

1 comment: