Sunday, October 25, 2009

உன் மெல்லினமும் என் வல்லினமும்


“எப்பவுமே கவிதைதான் எழுதுவீங்களா?,
புதிர் விடை ஏதாச்சும் எழுதுங்களேன்..!”
“என் காதலின் உயரம் ஐந்தரை அடி,
என் கவிதையின் எடை 54 கிலோ … அது என்ன?..”

“ஏன் காதல் கவிதை மட்டும் எழுதுறீங்க..?”
“தேவதைக்கு படிக்க விருப்பமானால்
என் மரண சாசனத்தையும் எழுதுகிறேன்…”


“ஏன் கவிதைகளில் கார்ட்டூன் படம்
வச்சிருக்கிங்க ?…”

“தேவதையை கவிதைக்குள் ஒழித்து
வைத்து விட்டு வெறும் பிம்பங்களை
மட்டும் காட்டுகிறேன்”…

” உங்க கவிதை எல்லாம் நல்லா இருக்கு!”
“ஆம் … தேவதை படித்த பின்பு மட்டும் ..!”

“யாரை பத்தி கவிதைகளில் இவ்ளோ எழுதுறீங்க..?”
“யாரந்த பெண் …?”
“மன்னிக்கவும் …. பெண்ணல்ல அது …!
பெண்ணுருவில் ஒரு மண்ணுலக தேவதை …!”


“சரி !!!… அந்த தேவதைதான் யாரு …?”
“வசந்த மாளிகை திரைப்படம் போல
ஏழு கண்ணாடி வைத்து காட்ட இயலாது,
என் கண்ணின் கருவிழியை மட்டும் பார் …
அதில் தெரியும் அந்த தேவதை ….!”


” ஏய் ….!!!.. அடி வாங்கப்போறீங்க ….”
“இன்னொரு முறை சொல்லேன்
அந்த ஹைக்கூ கவிதை வரிகளை ..!!!”

No comments:

Post a Comment