Saturday, September 26, 2009

கனவு


உன் விழி மேடையில் காத்திருந்தேன்
விடியும் வரை உன் அதிகாலை முதற்கனவாக…!!!
விழித்து பார்த்தேன் பகல் கனவு..!

விடுமுறை நாட்கள்


உழைப்பின் ஓய்வு !
வாழ்கையின் மற்றுமொரு பயிற்சி காலம் !!
அடுத்த பயணத்திற்கான முன் ஏற்பாடு !!!

காதலின் கபட நாடகம்

கண்கள் விழித்திருக்க கனவு ஏதுமின்றி இதயம் மட்டும் பறக்குதே !!!
உணர்வும் உயிர்த்திருக்க உறவும் ஏதுமின்றி மனசு மட்டும் துடிக்குதே !!!
அறிவை கேட்காமலே அச்சம் ஏதுமின்றி ஆசை மட்டும் ஏங்குதே !!!

தாய்


என் சின்ன சிரிப்பில்
உள்ள பொய்களையும்
என் கண்ணீரில் உள்ள
பெரிய உண்மைகளையும்
அவள் அறிவாள்….
ம்ம்ம் !!! …
என் அன்னைதான் !!!….

மௌனம்

மௌனம் என்பது
சில நேரங்களில் …..
உணரப்பட்ட தவறுகளுக்கு
கொணரப்பட்ட பரிகாரங்கள்…