Sunday, October 25, 2009

உன்னகே தெரியாமல்….


உன் துப்பட்டாவின் சில
தூரிகைகள் தான்
வண்ணமிடுகின்றன
என் கவிதைகளுக்கு ….

உன் வரிச்சேலை பூக்களும்
என் கவிச்சோலை வரிகளும்
காதலிக்கின்றன
காரணம் புரியாமல்…

உன் காலடிச் சுவடுகளை
தவிர வேறு கோலங்களை இடுவதில்லை,
என் இதய வாசலில்…

என் கவிதைகளில் எப்போதும்
உன்னை மறைத்தே வைக்கின்றேன்,
உன்னகே தெரியாமல்….

என் கவிதைக்கு கிடைத்த
முதல் பரிசு நீ …

No comments:

Post a Comment