Sunday, October 25, 2009

டோரா ……உன் பயணங்களில்


…. டோரா … டோரா … அன்பே டோரா …

எனது நினைவுகளும் சேர்ந்து
பயணம் செய்கிறது…
உன் பயணங்களில் போது …. !!!


“பரிசோதனையின் போது
கொடுக்கப்படவோ அல்லது
காண்பிக்கவோ வேண்டும்”
பயண சீட்டு மட்டும்மல்ல
உன் மனதையும் தான்
என்னிடத்தில் !!!…..

“ஊனமுற்றோர் அமருமிடம்”
நீ என்னுடன் இல்லாத
பயணங்களில் நான் அமருமிடம் ….


“சரியான சில்லரை கொடுத்து
பயணச்சீட்டு வாங்கவும் ”
என் நினைவில் ..
மூழ்கி மறந்து விடாதே …

“துளை இட்ட நிலையிலிருந்து
எதிர் நிலை வரை பயணம் செய்யலாம்”
என் மனம் உன்னால் துளை பட்ட
நிலையிலிருந்து நான்
மரணம் எதிர் கொள்ளும் நிலை வரை
நீ என் மனதில் பயணிக் கலாம்” …

“ரூல்ஸை அனுசரிக்க ”
எனக்கு நீ இட்ட கட்டளை
உன்னோடு என் பயணங்களில் ….


“பயண சீட்டு இல்லாமல் பயணித்தால்
ருபாய் ஆயிரம் அல்லது மூன்று மாதம்
சிறை தண்டனை”
நீ இல்லாமல் பயணித்தால் ….?…

No comments:

Post a Comment