Sunday, October 25, 2009

உன் உதாசீன பார்வைகளில் ….


என் அலைபேசியில்
இரண்டாம் முறை
கூட
குறுந்தகவல் செல்ல மறுக்கிறது
உனக்கு …..

கருவறையே எனக்கு
கல்லறையாகி இருந்தாலென்ன
என்று யோசித்தேன்
என் சின்ன அறையின்
ஒரு
மூலையில் அமர்ந்து …..


நீ
என்னிடம்
விட்டு சென்ற கொஞ்சல்கள்
கெஞ்சுகின்றன
என்னை விட்டு செல்ல வேண்டுமென்று ……

என் புகைப்பானின்
நுனியிலும்
மது புட்டியின்
சில படிகளிலும்
மீதமர்ந்து சிரிக்கின்றன
உன் புன்னகைகள் ….

நண்பனின்
சின்ன துன்பத்திலும்
என்
கண்ணீர் துளிகள்
பெருகி ஓடுகிறது
உனக்கும் சேர்த்துமாய் ….

சோகமான
திரை இசை பாடல்கள்
முதல் முறை
கேட்க்கும் போது மட்டும் உன் ஞாபகங்கள் …..
இரண்டாம் முறை
நான் கேட்க்கும் முன்
உன்னை பற்றிய நினைவுகள்
பேரலையாகின்றன
என் கண்களுக்குள் …

அதிலும்
என் கடைசி
சொட்டு கண்ணீர்
மட்டும்
ஏனோ உப்பு தன்மையாகிறது ….

மனசு
மட்டும் வேண்டும் என்றது
மீண்டும் உன்
அன்பு பார்வைகளை
அறிவு சொன்னது
அத்யாயம்
போதுமென்று …..

வாழ்வின்
சில அத்யாயங்களை
கற்று கொண்டேன்
உன்னால் …,,,
உன்
உதாசீன பார்வைகளுக்கும்
நன்றி பெண்ணே ….

No comments:

Post a Comment