Sunday, October 25, 2009

பித்துப் பிடித்த என் பேதங்கள்…


சப்தமே இல்லாமல்
சில கவிதைகளை
உதிர்க்கிறாய் …..
உன் அமைதியின் போதும் கூட …

நீ சப்தமிடும் போது தான்
என் கவிதைகள்
உன்
அமைதிகளை
பெறுகின்றன ….

உன் இறுக்கி முடிந்த
பின்னல் ஜடையில் தான்
சிக்கித் தவிக்கின்றன,
என்னுள் சில கவிதைகள் ….


ஒற்றைப் பூ போதாதடி
உன்
நெட்டைக் கூந்தலுக்கு ,
என் கவிதை பூந்தோட்டம்
காத்திருக்கிறது
தன்னை சூடிக்கொள்ள …


காரணம் தெரியாமல் கண்ணீர்
வடிக்கின்றன என் கவிதைகள்,
சில நேரம் ….
நீ சிரிக்க மறுக்கும் போதுதான் …

உன் மூக்கு சுட்டியில் முக்கால்வாசி
பிறை நிலவே தெரிகிறதே ….!
கரைந்தே விட்டதா கால்வாசி
வெண்ணிலவும்
உன் காதல் சுவாசத்தால் …?


மென் காதை குத்தும்
பொன் தோடுகள் வேண்டாமடி ….
பூட்டிகொள் அந்த பொன்னேடுகளை
உன்னை புகழும் என் கவி ஏடுகளை….

No comments:

Post a Comment