Sunday, October 25, 2009

நீ வருவாய் என …


முற்றுப்புள்ளி வைப்பது இல்லை
மூன்று புள்ளி இட்டுத்தான்
வைக்கிறேன்…
என் கவிதைகளில் …
நீ வருவாய் என …

முதன் முதலாய்
உன் முன்னால் என்
நுரை ஈரல் பிராண வாயுவை
வெளி இட்டது,
கரியமில வாயுவிற்கு பதிலாய் …
நீ வருவாய் என …

நுரை ஈரலும் உரை எழுதியது
இப்படித்தான் ,
என் இதயத்தின் காதலுக்காக…
நீ வருவாய் என …

பின்னிரவில் சிந்திக்கிறேன்
புரியாமல் ,
உன்னை புகழ்ந்து கவி எழுத
நீ வருவாய் என …


அரை தூக்கத்தில் கூட
அழுது கொண்டிருந்தேன் ….
நீ வருவாய் என …

தூக்கம் தெளியும் முன்னே
துடித்து கொண்டிருந்தேன்
என் அதிகாலை துயில் எழுப்ப,
நீ வருவாய் என …

No comments:

Post a Comment