Sunday, October 25, 2009

“தலைப்புக் கவிதைகள்”


“ப்ரியமுள்ள ப்ரியசகி”

“ஆயிரத்தில் ஒருத்தி”
“உன்னைப் போல் ஒருத்தி”
“யாரும் இல்லை கண்ணே”

“உன்னை நினைத்து ”
“சில சிறப்பு சிந்தனைகள்”

“உன் பார்வை பட்டறையில்”
“என் கெஞ்சலும் உன் கொஞ்சலும்”
“சந்தோச மாயங்கள்”

“அர்த்தமுள்ள உன் ஆரவாரங்கள்”
“பித்துப் பிடித்த என் பேதங்கள்”

“உன் இதழ் தொகுப்புகள்”
“உன் பேசும் பார்வையும் பேசாத வார்த்தைகளும்”
“சொல்லடி சகியே”


“வரம் ஒன்று கேட்கிறேன்”
“மீளுமா மறுபிறவி உன்னோடு நான்”

இப்படியெல்லாம்
உன்னை பற்றி
தலைப்பு மட்டும் எழுதி விட்டு
திரும்பி வர
தலைப்புகளும் கவிதைகள்
ஆனது என்று தெரியவில்லை எனக்கு…!!

No comments:

Post a Comment