Sunday, October 25, 2009

உன்னை நினைத்து…


உன் சிறிய புன்னகையில்
சிதறிய சில செல்லங்களை
கவ்விக்கொண்டேன் என் கண்களால்….


ஒரு கோப்பை தேநீரில்
ஒரு சொட்டு உன் புன்னகை
அதை பருகிய உடன்
பசித்திருந்தது மீண்டும் என் காதல்…


நீ குடித்த பின் தூக்கி எறிந்த
தேநீர் குவளையில் மிச்சம் இருந்தன
சில புன்னகை துளிகள் ….

கண்டேன் கண்டேன்
காதலின் தலையெழுத்தை
நீ குடித்த பின் வைத்து விட்டு சென்ற
நீர் குவளையில் பதிந்த உன் விர‌ல் ரேகைகளில்…


புதிர் விடை போல‌ தேடிக்கொண்டு இருந்தேன்
உன் பெருவிர‌ல் ரேகையில்
என் காத‌லின் மையப்புள்ளியை தேடி….

No comments:

Post a Comment