Sunday, October 25, 2009

உன் புன்னகை தேச‌த்தில்….


என்னை நீ கிள்ளி வைத்த இடங்களில்
சிவந்து போனது உன் வெட்கங்கள்…..

என்னை அடித்துவிட்டு அழுகிறாய்
என் க‌ன‌வில் காத‌லின் வ‌லியால் நீ….

உன் சிணுங்கல்களுக்கு
என் புன்னகையை உதிர்க்கிறேன்…
உன் மௌனங்களில் நீ சொல்கிறாய்
மற்றுமொருமுறை என்று….

என் சொப்பனங்கள் அனைத்தும்
உன‌க்கு அர்ப்பணம்
நீ உதிர்க்கும் புன்னகையால்….

நான் எத்திசை நோக்கினும்
உன் பூவிதழ் புன்னகையை
பிடித்துவிடுவேன்!
உன் இத‌ழுக்கும் என் கண்களுக்கும்
புலப்படாத புன்னகை விசையால்…

நீ தினம் ஒரு புன்னகையாவ‌து உதிர்த்து செல்
நான் கணம் ஒரு புலம்பலையாவ‌து கிறுக்கிவிட்டு செல்கிறேன்….

No comments:

Post a Comment