என் அன்னை எப்படி பட்டவள் என்றால்.....2:
(நாமக்கல் மாவட்ட கொங்கு பாசை அடிப்படையில் எழுதிய என் அன்னை பற்றி வாழ்க்கை நிகழ்ச்சி)
எம்புள்ள பொழக்கோனும்னு என்னனென்னவோ செஞ்சன்னிக்கு சும்மா இருக்க மாட்டியானு நான் கேட்க .... சுத்துபட்டு ஊரும் பிள்ள பித்து புடுச்சவனு புழங்காகிதப்பட... செத்த நேரம் கம்முனு இருக்கலாமுனா முடியல பாப்பானு மவகிட்ட மனகொரய கொட்ட... புத்தி கெட்டு திரியாதமானு மவபாட்ட மவளா இருந்து சொல்ல... ஏ பிள்ள இப்படி கஷ்டபடரனு அம்மா கேட்டா நீ கொடுத்த சீதானம் செஞ்சோத்து கடனுக்கே பத்தலம்மானு சொல்ல ... என்னத்த கொடுத்தேனு எகத்தாலும் பேசி எங்கப்பன் கொடுத்தான் நீ யென்ன கொடுத்தனு நுரண்டி இழுக்க.. எம்பொறவி பொழக்கோனும்னு விட்டுபோறன், எம்புருசன் கேட்ட என்ன சொல்லுவேன்னு சொல்லி கொஞ்சம் மிரட்ட.... எங்கப்பன் போட்ட சீதானம் ஊமவளுக்கு போட்ட, நீங்க என்ன செஞ்சீங்கனு கணக்கு கேட்டு... எழுதிகம் பண்ண என்தம்பி இருக்க நீங்க யாருனு மச்சான்னு கேட்க... மாமனும் மச்சானும் மண்ணிப்பு கேட்க... உங்கப்பன் கொடுக்கலனாலும் ஊன்தம்பி கொடுப்பான்புள்ள கலங்காத சொல்ல... அண்ணமாருக்கு பொங்க வெச்சா அரண்மனைக்கு வருவானாம் பேரன்னு ஆசப்பட்டு செய்ய... ஆத்தாலுக்கு பொங்க வெச்சா காத்தால குடும்பம் சேர்ந்திருங்கண்ணு சொல்லி பொங்கலும் மாவிளக்கும் பூசையொடு செய்ய...இன்னும் எத்தனையோ கதையிருக்க எனக்கு ஒரு சீலை துணி எடுத்துதா கண்ணுனு கேட்க நான் கொடுத்ததோ கடைசியா வெள்ளைல ஒரு கோடி துணி... கமலா எதுக்கு துணினு கடைசி வரைக்கும் சொல்லல... கலருதுணி எடுத்து வெச்சி காத்திருக்கேன்...எப்ப வருவ என்தாயே...கமலா.?
No comments:
Post a Comment